திருப்பூர் : திருப்பூர் அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் : திருப்பூர் அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினுள் உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறினார். பின்னர், அங்கே நின்று கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் எனக் கோரி கோஷம் எழுப்பினார். இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வந்து வாக்குறுதி அளித்தால் மட்டுமே டவரில் இருந்து இறங்குவேன் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 2 மணி நேரமாகப் போராட்டத்திற்கு பின்னர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், கார்மேகத்தை விசாரணைக்காக போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினுள் உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறினார். பின்னர், அங்கே நின்று கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் எனக் கோரி கோஷம் எழுப்பினார். இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வந்து வாக்குறுதி அளித்தால் மட்டுமே டவரில் இருந்து இறங்குவேன் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 2 மணி நேரமாகப் போராட்டத்திற்கு பின்னர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், கார்மேகத்தை விசாரணைக்காக போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.