நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை ஊராட்சிக்குட்பட்ட இத்தலார் பகுதியில் முக்கிமலை வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்களால் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளின் சார்பில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், அதிகளவு பயணிகள் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இருப்பினும், பேருந்தின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு, அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எமரால்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உதகை ஊராட்சிக்குட்பட்ட இத்தலார் பகுதியில் முக்கிமலை வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்களால் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளின் சார்பில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், அதிகளவு பயணிகள் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இருப்பினும், பேருந்தின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு, அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எமரால்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.