பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு

கோவை : கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு, மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.

கோவை : கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு, மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். 



கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் டி.ஆர்.ரவி (தெற்கு மண்டலம்), வி.சரவணன் (வடக்கு மண்டலம்), உதவி வருவாய் அலுவலர்கள் எம்.கார்த்திகேயன் (கிழக்கு மண்டலம்), எஸ்.மதுசூதனன் (மேற்கு மண்டலம்), டி.தமிழ்வேந்தன் (தெற்கு மண்டலம்), ஆர்.காளம்மாள் (வடக்கு மண்டலம்), எம்.எம்.கனகராஜ் (மத்திய மண்டலம்) மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர்கள் 5 பேருக்கும், உதவியாளர்கள் 10 பேருக்கும், இளநிலை உதவியாளர்கள் 6 பேருக்கும், வரிவசூலர் 4 பேருக்கும், பதிவுறுஎழுத்தர் 8 பேருக்கும் ஆக மொத்தம் 40 பேருக்கு சிறந்த வரிவசூல் செய்தமைக்காக பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் வழங்கிப் பாராட்டினார். 

கோவை மாநகராட்சி 2017-18-ம் நிதியாண்டின் சொத்துவரி சராசரியாக 95 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், கிழக்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தில் 96 சதவீதமும், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் 95 சதவீதமும் மற்றும் தெற்கு மண்டலத்தில் 90 சதவீதமும் சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சிறப்பாக சொத்துவரி வசூல் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் கே.ரவிக்குமார், செந்தில்குமார் ரத்தினம், ஜெ.ரவிக்குமார், அண்ணாதுரை, குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...