மேட்டுப்பாளையத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்டவர்களில் 2 பெண்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்டவர்களில் 2 பெண்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நாடார் காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் இருதினங்களுக்கு முன்பு பொறிச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாங்கி உண்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாகப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.



பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கோவிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதத்தில் கலக்கப்பட்ட நெய் காலாவதியானதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், சாவித்திரி (60), லோகநாயகி (62) என்ற இரு பெண் பக்தர்கள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...