கோவையில் 30 இடங்களில் போராட்டம்: பெண்கள் உட்பட 2,363 பேர் கைது

கோவை: காவிரி விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் நடத்திய 245 பெண்கள் உட்பட 2,363 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: காவிரி விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் நடத்திய 245 பெண்கள் உட்பட 2,363 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முழுமையான பந்த் நடைபெற்று வருகிறது.

கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தமிழகம் முழுதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கோவை:

கோவையைப் பொறுத்தவரையில், பிற்பகல் 12 மணி நிலவரப்படி 30 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 245 பெண்கள் உட்பட 2363 கைது செய்யப்பட்டுள்ளனர். நேரு நகர், சரவணம்பட்டி போன்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை மாநகர் முழுவதும் 1200 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் காவல் நிலைய போலிசார் உட்பட தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் 150 பேரும், ஆயுதப்படை காவலர்கள் 225 பேரும், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள் 175 பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

90 சதவீத கடைகள் மூடியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும் பகுதியை தவிர முக்கிய சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...