கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்களின் சேவை வரும் 8-ம் தேதி முதல் வரும் ஜுன் 11-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8 மணிக்குப் புறப்படுவதாக இருந்த (ரயில் எண் : 56604) சொரனூர் - கோவை பயணிகள் ரயில், 8-ம் தேதி முதல் ஜுன் 11-ம் தேதி வரை காலை 09.30 மணிக்கு கிளம்பும் (வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து).
இதேபோல, ஏப்., 06, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18 ஆகிய (வெள்ளிக்கிழமை) நாட்களில் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் (ரயில் எண் : 56604) சொர்னூர் - கோவை பயணிகள் ரயில், 20 நிமிடங்கள் கஞ்சிக்கோட்டில் நிறுத்தப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்களின் சேவை வரும் 8-ம் தேதி முதல் வரும் ஜுன் 11-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8 மணிக்குப் புறப்படுவதாக இருந்த (ரயில் எண் : 56604) சொரனூர் - கோவை பயணிகள் ரயில், 8-ம் தேதி முதல் ஜுன் 11-ம் தேதி வரை காலை 09.30 மணிக்கு கிளம்பும் (வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து).
இதேபோல, ஏப்., 06, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18 ஆகிய (வெள்ளிக்கிழமை) நாட்களில் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் (ரயில் எண் : 56604) சொர்னூர் - கோவை பயணிகள் ரயில், 20 நிமிடங்கள் கஞ்சிக்கோட்டில் நிறுத்தப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.