கூடலூர் அருகே காட்டுயானை தாக்கியதில் கூலி தொழிலாளி பலி

நீலகிரி: கூடலூர் அருகே எழுமரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் விஜகுமார் என்ற கூலி தொழிலாளி பலியானார்.

நீலகிரி: கூடலூர் அருகே எழுமரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி பலியானார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள எழுமரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் தனது உறவினரை அவரது வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை விஜயகுமாரை தாக்கியது. இதில் விஜயகுமாருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது விஜயகுமார் இறந்து போனது தெரிய வந்தது.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது அங்கு முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...