ஜல்லிக்கட்டு வன்முறை சம்பவம்: கோவையில் 10-ம் தேதி விசாரணை தொடக்கம்

கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான்காம் கட்ட விசாரணை வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான்காம் கட்ட விசாரணை வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஒரு சாரர் குற்றம்சாட்டினர். இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு யார் காரணம்? என்று விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கோவையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், 4-ம் கட்ட விசாரணை வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற இருக்கும் இந்த விசாரணையில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாட்சி அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...