முழு அடைப்பு - பின்னலாடை நிறுவனங்கள் முடக்கம்: பாதிக்கப்பட்ட திருப்பூர் தொழிலாளர்கள்

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து பனியின் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததனால் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும் அதைச்சார்ந்த லட்சக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 



மேலும், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பாத்திர உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...