திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து பனியின் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததனால் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும் அதைச்சார்ந்த லட்சக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.

மேலும், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பாத்திர உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து பனியின் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததனால் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும் அதைச்சார்ந்த லட்சக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.

மேலும், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பாத்திர உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.