கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதனை அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு மற்றும் பேருந்துகள் நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவையைப் பொறுத்தவரையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் இந்த சூழ்நிலை காரணமாக, கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கார்நாடகா செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.