மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் தமிழக அரசு - கமல்

'மத்திய அரசும், மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசும் நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.

'மத்திய அரசும், மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசும் நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. காவிரி பிரச்னையில் நூற்றாண்டுகளாக தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். 

காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால், தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும். அரசியல் சூழ்ச்சி வேண்டாம், நேர் கொள்வோம், எதிர்கொள்வோம். காவிரி பிரச்சனையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. 

இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு. எங்களுக்கு உண்ணாவிரத்தத்தில் நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் நம்பிக்கையுள்ளது. மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசு, நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள். 

உறங்குபவர்களை தட்டி எழுப்பிவிடலாம், உறங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. நாங்கள் செயல்பட தொடங்கும்போது மக்கள் ஏமாற மாட்டார்கள். சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டியவர்களுடன் சேருவோம்’ என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...