கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது.
கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 06-ம் தேதி (ரயில் எண்: 06075) சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு கட்டண ரயில், உதய் இரண்டடுக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஒருவழிப் பயணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும்.
இதில், 8 குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு பெட்டிகளில், 3 பேண்ட்ரி வசதியுடன் கூடியதாகும். பேண்ட்ரி வசதி கூடிய பெட்டிகளில் தலா 104 பயணிகளும், எஞ்சிய ஐந்து பெட்டிகளில் தலா 120 பயணிகளும் செல்லும் வசதி பெற்றுள்ளது.
இந்தச் சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 5-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 06-ம் தேதி (ரயில் எண்: 06075) சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு கட்டண ரயில், உதய் இரண்டடுக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஒருவழிப் பயணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும்.
இதில், 8 குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு பெட்டிகளில், 3 பேண்ட்ரி வசதியுடன் கூடியதாகும். பேண்ட்ரி வசதி கூடிய பெட்டிகளில் தலா 104 பயணிகளும், எஞ்சிய ஐந்து பெட்டிகளில் தலா 120 பயணிகளும் செல்லும் வசதி பெற்றுள்ளது.
இந்தச் சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 5-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.