கோவை - சென்னை இடையே இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது.

கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது. 



இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 06-ம் தேதி (ரயில் எண்: 06075) சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு கட்டண ரயில், உதய் இரண்டடுக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஒருவழிப் பயணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும்.

இதில், 8 குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு பெட்டிகளில், 3 பேண்ட்ரி வசதியுடன் கூடியதாகும். பேண்ட்ரி வசதி கூடிய பெட்டிகளில் தலா 104 பயணிகளும், எஞ்சிய ஐந்து பெட்டிகளில் தலா 120 பயணிகளும் செல்லும் வசதி பெற்றுள்ளது. 

இந்தச் சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 5-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...