ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ரயில்நிலையங்களில் உள்ளே நுழைந்து ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ரயில்நிலையங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "போராட்டங்களின் போது ரயில் நிலையங்களில் உள் நுழைந்து ரயில்களை நிறுத்த வேண்டாம். ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிக்கிறது. ரயில் பயணிகள், முக்கியமாக வயதான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போராட்டங்களின் போது ரயில் நிலையங்களின் உள் வந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ரயில்நிலையங்களில் உள்ளே நுழைந்து ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ரயில்நிலையங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "போராட்டங்களின் போது ரயில் நிலையங்களில் உள் நுழைந்து ரயில்களை நிறுத்த வேண்டாம். ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிக்கிறது. ரயில் பயணிகள், முக்கியமாக வயதான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போராட்டங்களின் போது ரயில் நிலையங்களின் உள் வந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவித்துள்ளார்.