போராட்ட உணர்வுகளை மதிக்கிறோம்..! ரயிலை நிறுத்த வேண்டாம்..!

ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ரயில்நிலையங்களில் உள்ளே நுழைந்து ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில், ரயில்நிலையங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "போராட்டங்களின் போது ரயில் நிலையங்களில் உள் நுழைந்து ரயில்களை நிறுத்த வேண்டாம். ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிக்கிறது. ரயில் பயணிகள், முக்கியமாக வயதான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போராட்டங்களின் போது ரயில் நிலையங்களின் உள் வந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...