திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் அகிலன் என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், அகிலன் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, நேற்று மாலை ஐந்து மணியளவில் மாணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பள்ளியில் இருந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் அகிலன் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கூறியதாவது :- பள்ளிக்கு செல்லும் பொழுது உடல்நிலை நன்றாக இருந்தது. பள்ளியில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்தின் காரணமாக மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். இவ்வாறு கூறினார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகிலனை மட்டும் அடித்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் அகிலன் என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், அகிலன் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, நேற்று மாலை ஐந்து மணியளவில் மாணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பள்ளியில் இருந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் அகிலன் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கூறியதாவது :- பள்ளிக்கு செல்லும் பொழுது உடல்நிலை நன்றாக இருந்தது. பள்ளியில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்தின் காரணமாக மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். இவ்வாறு கூறினார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகிலனை மட்டும் அடித்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.