காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகம் : தமிழிசை

நீலகிரி : காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகமாடுவதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகமாடுவதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க., பூத் கமிட்டி கூட்டம் உதகையில் உள்ள இளம்படுகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீலகிரி வருகை புரிந்தார். அப்போது, அவருக்குப் படுகர் இன பாரம்பரிய முறைப்படி தலையில் ‘முண்டு கட்டி’ (வெள்ளை நிற துண்டு) வரவேற்பு அளிக்கப்பட்டது. 



அப்போது, அவர் பேசுகையில், "50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் காவிரி பிரச்சினையை விட்டுவிட்டு, தற்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இப்பிரச்சினையில் 50 ஆண்டுகளாக அக்கறை காட்டவில்லை. ஆனால், பா.ஜ.க., 5 வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும். நிரந்தர தீர்விற்காகவே, சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட பாஜக., விடாது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேபோல, தமிழகத்தில் நியுட்ரினோ திட்டம் கொண்டு வருவது நல்லது. தேனி மாவட்ட மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை ஒப்புக் கொள்கிறோம். அதனை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் 5,000 முதல் 10,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த பொதுத்துறை நிறுவனமான எச்.பி.எப்., தொழிற்சாலை மூடப்பட்டது. மீண்டும் இங்கு 5,000 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தொழிற்சாலை அமைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...