கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-ம் கோவை கணபதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் காணாமல் போனார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 2013-ம் ஆண்டு சவுந்தரராஜன், சிவவிஷ்ணு ஆகிய இருவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெர்னாண்டஸை, கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக சரவணம்பட்டி போலீசார் மாற்றினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று விசாரணைக்கு வந்த போது, சவுந்தரராஜன், சிவவிஷ்னு ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 3,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2005-ம் கோவை கணபதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் காணாமல் போனார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 2013-ம் ஆண்டு சவுந்தரராஜன், சிவவிஷ்ணு ஆகிய இருவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெர்னாண்டஸை, கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக சரவணம்பட்டி போலீசார் மாற்றினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று விசாரணைக்கு வந்த போது, சவுந்தரராஜன், சிவவிஷ்னு ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 3,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.