திருப்பூரில் 3 நாட்கள் நடக்கும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி

திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது.

திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது. 

திருப்பூர் - அவிநாசி சாலை பழங்கறையில் உள்ள ஐ.கே. எஃப் வளாகத்தில், 'நிட் எக்ஸ்பிரஸ் 2018' என்ற பின்னலாடை டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியானது, காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெறுகிறது. 

இது குறித்து கண்காட்சியின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நிட் எக்ஸ்பிரஸின் முதல் கண்காட்சியாகவும், இந்த ஆண்டின் முதல் கண்காட்சியாக இந்தப் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறுகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொள்வதோடு, அந்நாடுகளில் தயாரிக்கப்படும் இயந்திரங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. அதே போல, பின்னலாடை துறைக்கு தேவைப்படும் கெமிக்கல், டைஸ், லேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைத்து, தங்களின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளனர்," இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...