சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சி : மண் மேடுகளாக காட்சிளிக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகள்

கோவை : வால்பாறையில் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறட்சியடைந்து மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது.

கோவை : வால்பாறையில் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறட்சியடைந்து மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது. 



வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வெயிலின் காரணமாக முக்கிய நீர் நிலைகளான சோலையார் அணை, கூழாங்கல் ஆறு போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக சோலையார் அணையில் தண்ணீர் வெகுவாக குறைந்து ஒரு சிறிய குட்டை போல காட்சியளிக்கிறது. 



சோலையார் அணையின் சுற்றுவட்டார நீர் நிலைப்பகுதியான உருளிக்கல் பெரியார் நகர் பகுதி தற்போது மண் திட்டுகளாக காட்சியளிக்கிறது. சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியிலிருந்து தற்போது 12 அடியாக காணப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 53.36 கன அடியாக உள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருவதால் சற்று வெப்பம் குறைந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...