ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு வரும் 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு வரும் 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவர் தாக்கல் செய்த மனுவில், சூதாட்டத்தைத்தடை செய்யாமல் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது. சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கமளிக்க பி.சி.சி.ஐ., மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவர் தாக்கல் செய்த மனுவில், சூதாட்டத்தைத்தடை செய்யாமல் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது. சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கமளிக்க பி.சி.சி.ஐ., மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.