பிளாட்டினம் அந்தஸ்தைப் பெற்றது ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல்

கோவை :கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.

கோவை : கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பிரபல ஓட்டல்கள், அதன் கட்டுமானம், அமைப்பு, புதிய தயாரிப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தரநிலையை வழங்கி வருகிறது. சில்வர் என்ற அடிப்படை தரநிலை முதல் பிளாட்டினம் என்ற உயர்நிலை தரநிலை வரை ஓட்டல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல ஐ.டி.சி. வெல்கம்ஓட்டலுக்கு பிளாட்டினம் தரநிலை வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் லீடர்சிப் இன் எனர்ஜி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரநிலை அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஓட்டலானது, கோவையில் பிளாட்டினம் தரவரிசையைப் பெற்ற முதல் ஓட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...