கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் மாட்டு வண்டியில் வந்த தி.மு.க. வாயில் எலி பொம்மைகளை கடித்தும், சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.
கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் மாட்டு வண்டியில் வந்த தி.மு.க. வாயில் எலி பொம்மைகளை கடித்தும், சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க-வினர் 4 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், செல்வபுரம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முன்னதாக, காளை மாடுகளை மாட்டு வண்டியில் பூட்டி, எர் கலப்பையுடன் வந்த கட்சியினர், விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டதை வெளிப்படுத்தும் விதமாக, மறியலில் ஈடுபட்டனர்.

கருப்பு சட்டை அணிந்த தி.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து, வாயில் எலி பொம்மைகளை கவ்விய படி, சங்கு ஊதியும், மணி அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.