கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நாடார் காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று பொறிச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாங்கி உண்டனர். இந்நிலையில், அவல் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு நேற்று நள்ளிரவு முதலே உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரச்சனை அதிகரித்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் இவர்களுக்கு (Food Poison) எனப்படும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதத்தில் கலக்கப்பட்ட நெய் காலாவதியாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மேலும் சிலரும் இதுதொடர்பான உடல் நலக்கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற தொடர்ந்து வந்தபடி உள்ளனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை எந்தக் காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நாடார் காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று பொறிச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாங்கி உண்டனர். இந்நிலையில், அவல் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு நேற்று நள்ளிரவு முதலே உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரச்சனை அதிகரித்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் இவர்களுக்கு (Food Poison) எனப்படும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதத்தில் கலக்கப்பட்ட நெய் காலாவதியாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மேலும் சிலரும் இதுதொடர்பான உடல் நலக்கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற தொடர்ந்து வந்தபடி உள்ளனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை எந்தக் காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.