கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.
கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.
வடிவேலாம்பாளையம் பகுதியில் ராஜநாகம் ஒன்று சுற்றித் திரிவதாக மதுக்கரை வனச் சரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று அங்கு சென்ற வனத்துறையினர், பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் 6 அடி நீளமுடைய ராஜநாகத்தை பிடித்தனர். தொடர்ந்து அந்த ராஜநாகம் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
இந்த ராஜநாகம் 20 அடி நீளம் வரை வளரும் என்றும், அது இரைக்காக மற்ற பாம்புகளை உண்ணக்கூடியது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
வடிவேலாம்பாளையம் பகுதியில் ராஜநாகம் ஒன்று சுற்றித் திரிவதாக மதுக்கரை வனச் சரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று அங்கு சென்ற வனத்துறையினர், பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் 6 அடி நீளமுடைய ராஜநாகத்தை பிடித்தனர். தொடர்ந்து அந்த ராஜநாகம் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
இந்த ராஜநாகம் 20 அடி நீளம் வரை வளரும் என்றும், அது இரைக்காக மற்ற பாம்புகளை உண்ணக்கூடியது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.