காவிரி விவகாரத்தில் போலி உண்ணாவிரதம் இருந்து தனது இயலாமையை தமிழக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்
காவிரி விவகாரத்தில் போலி உண்ணாவிரதம் இருந்து தனது இயலாமையை தமிழக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உதயமான மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்துவதாக அதன் நிறுவனர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் சுப்பிரமணியபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் திருச்சிக்கு நேற்று மாலை கமல்ஹாசன் வருகை தந்தார். இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரம், கட்சியின் கொள்கை, தேர்தல் கூட்டணி ஆகியவற்றை விரிவாக அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில், திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யம் பிப்.,22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம் நாங்கள். ஆனால், ஏற்கனவே 2016-ல் நிகழ்ந்த நிகழ்வுகள் ஞாபகம் வருகின்றன. அப்போது, 4 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போதும், நுணுக்கங்களை தயாரித்து சாக்குபோக்கு சொல்லி தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது.
காவிரி வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தனது இயலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு. இந்த நிகழ்வுகளினால் எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதிக்கும். பிரச்சினைகள் மட்டும் பேசாமல் தீர்வுகளுக்கான வழிகளையும் முன்னிறுத்தும். இதுவரை நடந்த எங்களின் ஆய்வுபடி முக்கிய துறைகளில் மையத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடு அறிவிக்கப்படும். இதனை மையமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் எங்களின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உதயமான மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்துவதாக அதன் நிறுவனர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் சுப்பிரமணியபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் திருச்சிக்கு நேற்று மாலை கமல்ஹாசன் வருகை தந்தார். இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரம், கட்சியின் கொள்கை, தேர்தல் கூட்டணி ஆகியவற்றை விரிவாக அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில், திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யம் பிப்.,22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம் நாங்கள். ஆனால், ஏற்கனவே 2016-ல் நிகழ்ந்த நிகழ்வுகள் ஞாபகம் வருகின்றன. அப்போது, 4 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போதும், நுணுக்கங்களை தயாரித்து சாக்குபோக்கு சொல்லி தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது.
காவிரி வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தனது இயலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு. இந்த நிகழ்வுகளினால் எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதிக்கும். பிரச்சினைகள் மட்டும் பேசாமல் தீர்வுகளுக்கான வழிகளையும் முன்னிறுத்தும். இதுவரை நடந்த எங்களின் ஆய்வுபடி முக்கிய துறைகளில் மையத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடு அறிவிக்கப்படும். இதனை மையமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் எங்களின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.