கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தும் வகையில், வழக்கறிஞர்கள் இன்று காலை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறே நீதிமன்றத்திற்குத் திரும்பி சென்றனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தின் வாயில் பகுதியில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் பேனரில் இருந்த இந்தி வார்த்தையை கிழித்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.
புறக்கணிப்பு
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மீத்தேன், நியூட்ரினோ மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய திட்டங்களை எதிர்த்து வரும் 7-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர்கள் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.