கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு கோவையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு கோவையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவையை அடித்தளமாக் கொண்டு செயல்படும் பாரத் கலா ஆராதனா அமைப்பு அழியும் தருவாயில் உள்ள கலைகளையும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இரண்டாம் நிகழ்வாக 'கேரளக் கலைகள்" என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்வில் கேரளா மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கிக்காணி பள்ளியில் மாலை நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில் கேரளக் கலைகள் குறித்த விளக்கங்களும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையை அடித்தளமாக் கொண்டு செயல்படும் பாரத் கலா ஆராதனா அமைப்பு அழியும் தருவாயில் உள்ள கலைகளையும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இரண்டாம் நிகழ்வாக 'கேரளக் கலைகள்" என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்வில் கேரளா மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கிக்காணி பள்ளியில் மாலை நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில் கேரளக் கலைகள் குறித்த விளக்கங்களும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.