கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (சி.பி.ஐ) இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (சி.பி.ஐ) இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனிடையே, ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் ரயில் நிலையத்திற்கு வந்து சென்ற பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.