கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் பெண் பலி

கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார். 



சுங்கம் பைப்பாஸ் சாலையை சேர்ந்தவர் மரியதாஸ்(51). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி விக்டோரியா. இன்று அதிகாலை இவர்கள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி மரியதாசின் வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விக்டோரியா பரிதாபமாக பலியானார். மரியதாஸ் படுகாயமடைந்தார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விக்டோரியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மரியதாசை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அடிக்கடி சுங்கம் பைபாஸ் சாலையில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு சுவர் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...