நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 18 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சாலை சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியின் தலையீட்டால், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தேயிலை விவசாய உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை நீக்கி விட்டு, தன்னிச்சையாக ஆளுங்கட்சியினருக்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்து பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 18 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சாலை சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியின் தலையீட்டால், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தேயிலை விவசாய உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை நீக்கி விட்டு, தன்னிச்சையாக ஆளுங்கட்சியினருக்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்து பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.