அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை புறக்கணித்த தேயிலை விவசாய உறுப்பினர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 



நீலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 18 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சாலை சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியின் தலையீட்டால், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தேயிலை விவசாய உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை நீக்கி விட்டு, தன்னிச்சையாக ஆளுங்கட்சியினருக்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்து பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...