காவிரி விவகாரம் : கோவை ரயில்நிலையத்தை முடக்கிய அரசியல் கட்சிகள்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள், போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்தனர்.

2-ம் நடைமேடையில் வந்த ரப்திசாகர் விரைவு ரயிலை மறித்த போராட்டக்காரர்கள், ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தி.மு.க.வின் மகளிர் அணியினர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தி.மு.க.,வின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தெரிவித்தார். இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...