திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த திருச்சி பொன்னமலையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்தார். இதற்காக, அவர் இன்று காலை சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பை திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்தவிதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால், நாளை நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடக்குமா..? என சந்தேகம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் ஆணையர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த திருச்சி பொன்னமலையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்தார். இதற்காக, அவர் இன்று காலை சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பை திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்தவிதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால், நாளை நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடக்குமா..? என சந்தேகம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் ஆணையர் கூறியுள்ளார்.