கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., மற்றும் எம்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி கோவையில் உள்ள மத்திய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவது பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., மற்றும் எம்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி கோவையில் உள்ள மத்திய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவது பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.