கோவையில் வரும் 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் நான்கு இடங்களில் மறியல் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., மற்றும் எம்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 

அப்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி கோவையில் உள்ள மத்திய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவது பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...