கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டங்களில் முழக்கங்களாக எழுந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டங்களில் முழக்கங்களாக எழுந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.