காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. 



தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டங்களில் முழக்கங்களாக எழுந்துள்ளது. இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...