கோவை, திருப்பூர் நீலகிரியில் அ.தி.மு.க தொண்டர்கள் உண்ணாவிரதம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 

காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 



கோவை காந்திபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 



திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய அ.தி.மு.க தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 



நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர், எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன் தலைமை தாங்கினார். 



இதுமட்டுமல்லாது தி.மு.க வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை விமான நிலையத்தின் முன்பு கூடிய தி.மு.க வினர் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.



இதே போல், பெரியநாயக்கன்பாளையத்தில் தி.மு.க வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சி.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.



வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...