காவிரி விவகாரம் : திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் தலைமையில் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருப்பூர் : காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும், மத்திய அரசு  காவிரி மேலாண்மை அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன்படி, திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 



அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "காவிரி பிரச்சினைக்காக மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி உரிமையை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. அதேவழியில் நடைபெறும் இந்த ஆட்சியும் காவிரி உரிமையை மீட்டெடுக்கும். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தால் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை அமைக்கும்." என்றார். 



இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் 800 மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளது இதனால் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...