கோவை: காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது.
காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது.
தீர்க்கவே முடியாத பிரச்சனை போல காவிரி பிரச்சனையை மத்திய அரசு உருவகப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பல ஆண்டுகளைத் தீர்க்கப்படாமல் உள்ளதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள கட்சிகள் காவிரிக்காக பல்வேறு காலகட்டத்தில் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் இன்று எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1993-ம் ஆண்டு காவிரிக்காக அ.தி.மு.க. குரல் கொடுத்தது. அன்றைய ஆளும் கட்சியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
மொத்தத்தில் காவிரி விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அ.தி.மு.க. தனது போராட்டத்தை தொடங்கிவிட்டது.
தீர்க்கவே முடியாத பிரச்சனை போல காவிரி பிரச்சனையை மத்திய அரசு உருவகப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பல ஆண்டுகளைத் தீர்க்கப்படாமல் உள்ளதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள கட்சிகள் காவிரிக்காக பல்வேறு காலகட்டத்தில் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் இன்று எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1993-ம் ஆண்டு காவிரிக்காக அ.தி.மு.க. குரல் கொடுத்தது. அன்றைய ஆளும் கட்சியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
மொத்தத்தில் காவிரி விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அ.தி.மு.க. தனது போராட்டத்தை தொடங்கிவிட்டது.