காவிரிக்காக மூன்றாவது முறையாக போராட்டம் நடத்துகிறது அ.தி.மு.க.

கோவை: காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது.

காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது. 

தீர்க்கவே முடியாத பிரச்சனை போல காவிரி பிரச்சனையை மத்திய அரசு உருவகப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பல ஆண்டுகளைத் தீர்க்கப்படாமல் உள்ளதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள கட்சிகள் காவிரிக்காக பல்வேறு காலகட்டத்தில் குரல் கொடுத்து வருகின்றன. 

அந்த வகையில் இன்று எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 



முன்னதாக, கடந்த 1993-ம் ஆண்டு காவிரிக்காக அ.தி.மு.க. குரல் கொடுத்தது. அன்றைய ஆளும் கட்சியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது. 

அதனைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 

மொத்தத்தில் காவிரி விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அ.தி.மு.க. தனது போராட்டத்தை தொடங்கிவிட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...