நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் : போராட்ட களத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 



காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பாக அ.தி.மு.க. சார்பில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயல்திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், சூலூர் கனகராஜ், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, மற்றும் முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

போராட்டத்தின் போது அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த போராட்டம் உணர்வுப் பூர்வமாகவும், எழுச்சிமிக்க போராட்டமாகவும் நடைபெற்று வருகிறது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை அமைக்கும் வரை ஓய மாட்டோம். தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இத்தனை பிரச்சனைகளுக்கும் தி.மு.க தான் காரணம். அவர்கள் வானளாவிய அதிகாரத்தில் இருந்த போதும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசியல் ஆதாயத்திற்காக போராடி வருகின்றனர். சாதனை படைக்கும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடைபெறுகிறது. அடுத்த கட்ட முடிவுகள் குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார்கள்." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...