நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா, கர்நாடகா வாகனங்கள் உதகை தலைகுந்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் 100-க் கணக்கான வாகனங்கள் உதகையை வந்தடைகின்றன.
இந்நிலையில் கேரளாவிலிருந்து தலைகுந்தா, பாரதியார் நகர் பகுதியில் கேரளா மாநில கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் மீது அங்கிருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இனி வரும் மழைக் காலங்களுக்குள் சாலையோரம் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணம் செய்ய முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா, கர்நாடகா வாகனங்கள் உதகை தலைகுந்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் 100-க் கணக்கான வாகனங்கள் உதகையை வந்தடைகின்றன.
இந்நிலையில் கேரளாவிலிருந்து தலைகுந்தா, பாரதியார் நகர் பகுதியில் கேரளா மாநில கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் மீது அங்கிருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இனி வரும் மழைக் காலங்களுக்குள் சாலையோரம் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணம் செய்ய முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.
