கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.
கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. அங்குள்ள சிவலிங்க தியான பீடம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது அங்கு 112-அடி உயரத்தில் ஆதியோகியின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
'காட்டை அழித்து கட்டப்பட்டது தான் இந்த சிலை' என்றும், 'ஜாக்கி வாசுதேவின் உருவமே ஆதியோகி சிலை' என்றும் சிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் ஆதி யோகி சிலை உலகின் மிகப் பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, இந்த சிலையை 'Incredible India' சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. அங்குள்ள சிவலிங்க தியான பீடம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது அங்கு 112-அடி உயரத்தில் ஆதியோகியின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
'காட்டை அழித்து கட்டப்பட்டது தான் இந்த சிலை' என்றும், 'ஜாக்கி வாசுதேவின் உருவமே ஆதியோகி சிலை' என்றும் சிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் ஆதி யோகி சிலை உலகின் மிகப் பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, இந்த சிலையை 'Incredible India' சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.