ஈஷா யோகா மையத்தின் ஆதி யோகி சிலை இந்திய சுற்றுலாத் தலமாக அறிவிப்பு

கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.



கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. அங்குள்ள சிவலிங்க தியான பீடம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது அங்கு 112-அடி உயரத்தில் ஆதியோகியின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

'காட்டை அழித்து கட்டப்பட்டது தான் இந்த சிலை' என்றும், 'ஜாக்கி வாசுதேவின் உருவமே ஆதியோகி சிலை' என்றும் சிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. 

இந்த நிலையில் ஆதி யோகி சிலை உலகின் மிகப் பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, இந்த சிலையை 'Incredible India' சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...