கோவை : காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன.
கோவை : காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், யானைகளின் பணிக்காலம் முடிந்து ஆனைமலை அடுத்த வரகலியாருக்கு பாரியும், முதுமலையை அடுத்த தேக்கம்பட்டிக்கு சுஜயும் அனுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து அழைத்து வரப்படுகின்றன.
இது குறித்து வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "பாரி என்ற கும்கி யானை நஞ்சன் என்ற கும்கியுடன் இருந்தது. அவைகள் யானை மனித மோதல்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், நஞ்சன் யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது உயிரிழந்தது. தொடர்ந்து சுஜய் கோவைக்கு அழைத்து வரப்பட்டது. மதுக்கரை மகாராஜா என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு அவை இரண்டும் உதவின. தற்போது, புதிதாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு காட்டு யானைகள் கோவைக்கு வரவுள்ளன. அந்த இரண்டு கும்கிகளும் இன்று கோவையை வந்தடையும்." என்றார்.

இந்த நிலையில், யானைகளின் பணிக்காலம் முடிந்து ஆனைமலை அடுத்த வரகலியாருக்கு பாரியும், முதுமலையை அடுத்த தேக்கம்பட்டிக்கு சுஜயும் அனுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து அழைத்து வரப்படுகின்றன.
இது குறித்து வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "பாரி என்ற கும்கி யானை நஞ்சன் என்ற கும்கியுடன் இருந்தது. அவைகள் யானை மனித மோதல்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், நஞ்சன் யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது உயிரிழந்தது. தொடர்ந்து சுஜய் கோவைக்கு அழைத்து வரப்பட்டது. மதுக்கரை மகாராஜா என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு அவை இரண்டும் உதவின. தற்போது, புதிதாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு காட்டு யானைகள் கோவைக்கு வரவுள்ளன. அந்த இரண்டு கும்கிகளும் இன்று கோவையை வந்தடையும்." என்றார்.