கோவை விமான நிலைய விரிவாக்கம் : நாளை நில உரிமையாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். 

இருகூர் பகுதியில் இன்னும் கையகப்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நிலத்திற்காக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் விலை, மற்றும் அரசு நிர்ணயித்த விலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அது தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசு நிர்ணயித்த விலையின் படி, விவசாய நிலத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ. 900-மும், குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.1500 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டிடங்களுக்கும், மரங்களுக்கும் தனியாக விலை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...