தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை. இந்த குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் அதனைச் செய்வார்கள்." என்றார்.
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை. இந்த குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் அதனைச் செய்வார்கள்." என்றார்.