தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை - கமலஹாசன்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை. இந்த குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் அதனைச் செய்வார்கள்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...