நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா என பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களில் அந்த சுற்றுலா தளங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் கடந்த மூன்று நாட்களில் 42,578 பேர் வருகை புரிந்துள்ளனர். மேலும், அரசு ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவிற்கு கடந்த முன்று நாட்களில் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சமவெளி பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து குவிந்ததால் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா என பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களில் அந்த சுற்றுலா தளங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் கடந்த மூன்று நாட்களில் 42,578 பேர் வருகை புரிந்துள்ளனர். மேலும், அரசு ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவிற்கு கடந்த முன்று நாட்களில் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சமவெளி பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து குவிந்ததால் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.