கோவை : சமூக ஆர்வலரான லீலா குமரியம்மாவின் சுயசரிதை புத்தகம் கோவையில் இன்று வெளியிடப்பட்டது.
கோவை : சமூக ஆர்வலரான லீலா குமரியம்மாவின் சுயசரிதை புத்தகம் கோவையில் இன்று வெளியிடப்பட்டது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் லீலா குமரியம்மா. விவசாய தொழில் செய்து வந்த இவர் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது சுயசரிதையை பாவேந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த புத்தகத்திற்கு 'பால் நிலா பறவை லீலா குமரியம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்த புத்தகத்தை நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குணசேகரன் வெளியிட்டார். இந்த விழாவில் வேளாண் பல்கலையின் துணை வேந்தர் ராமசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குணசேகரன் பேசுகையில், " இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரச்சனைகளில் இருந்து மாற்றியமைத்து வருகின்றனர். நேர்மையாக இருக்கின்றனர். இளைஞர்கள் சமுதாய பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். " என்றார்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் லீலா குமரியம்மா. விவசாய தொழில் செய்து வந்த இவர் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது சுயசரிதையை பாவேந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த புத்தகத்திற்கு 'பால் நிலா பறவை லீலா குமரியம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்த புத்தகத்தை நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குணசேகரன் வெளியிட்டார். இந்த விழாவில் வேளாண் பல்கலையின் துணை வேந்தர் ராமசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குணசேகரன் பேசுகையில், " இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரச்சனைகளில் இருந்து மாற்றியமைத்து வருகின்றனர். நேர்மையாக இருக்கின்றனர். இளைஞர்கள் சமுதாய பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். " என்றார்.