கோவை: கோவையில் இருந்து பெங்களூரூ விமான நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது.
கோவை: கோவையில் இருந்து பெங்களூரூ விமான நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது.
கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு முதல் முறையாக நவீன வசதிகளுடன் கர்நாடக அரசின் பேருந்து சேவை நேற்று முதல் துவங்கப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பேருந்து பயணிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்து கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூரூ விமான நிலையத்தை சென்றடைகிறது.

கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பெங்களூரூவை சென்றடைகிறது. இதனையடுத்து, மீண்டும் அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் பேருந்து காலை 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்தப் பேருந்திற்கு ரூ. 1,100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் நகரான கோவையில் பெங்களூரூவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கப்படாத நிலையில், தற்போது நவீன வசதிகளுடன் பேருந்து சேவை அறிமுகப்படுத்தியிருப்பது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.