கோவை: அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் போது, தனியார் பள்ளிகளும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை: அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் போது, தனியார் பள்ளிகளும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், " தனியார் பள்ளியாக இருந்தாலும் கோடை காலங்களில் விடுமுறை விடப்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் மன நிலையைக் கருத்தில் கொண்டு 4,000 பேருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், தகுதி தேர்வு மூலம் நான்காயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளோம். அவர்களுக்கு ஒன்பது கல்லூரிகளில் தனி பயிற்சி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தத் துறைக்கு சென்றாலும் சிறந்து விளங்க இதுபோன்ற பயிற்சிகள் பயன்படும்," எனக் கூறினார்.
இதேபோல, கூட்டம் காரணமாக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வது குறித்து புகார்கள் வந்தால், போக்குவரத்து துறை அமைச்சரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், " தனியார் பள்ளியாக இருந்தாலும் கோடை காலங்களில் விடுமுறை விடப்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் மன நிலையைக் கருத்தில் கொண்டு 4,000 பேருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், தகுதி தேர்வு மூலம் நான்காயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளோம். அவர்களுக்கு ஒன்பது கல்லூரிகளில் தனி பயிற்சி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தத் துறைக்கு சென்றாலும் சிறந்து விளங்க இதுபோன்ற பயிற்சிகள் பயன்படும்," எனக் கூறினார்.
இதேபோல, கூட்டம் காரணமாக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வது குறித்து புகார்கள் வந்தால், போக்குவரத்து துறை அமைச்சரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.