காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக சேலை கட்டி மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சென்னை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் பேசுகையில், "தமிழக அரசு மத்திய அரசின் அடிமைபோல் செயல்படுவதால் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கிறது. மக்களுக்காக செயல்படாமல் , பதவிக்காக செயல்படும் மத்திய, மாநில பேடி அரசுகளை கண்டித்து சென்னை முழுவதும் சேலை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவர்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறோம்," என்றார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக சேலை கட்டி மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சென்னை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் பேசுகையில், "தமிழக அரசு மத்திய அரசின் அடிமைபோல் செயல்படுவதால் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கிறது. மக்களுக்காக செயல்படாமல் , பதவிக்காக செயல்படும் மத்திய, மாநில பேடி அரசுகளை கண்டித்து சென்னை முழுவதும் சேலை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவர்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறோம்," என்றார்.