காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.